Thursday, 12 November 2009

ஆத்மாவின் நேசம்...

நித்தம் ஒரு காதல் செய்ய

என் தேடல் தேகம் அல்ல அதுவே...

என் தேடல் என்றால்...

என் தேவை ஒரு பெண்தானே...

அன்றி நீ அல்ல

முற்றிலும் துறந்தவனாய்...

வாழ்ந்துவிட்டுபோக...

நான் துறவியும் அல்ல

ஆசைகளாலும்....,

புன்னகையாலும்....,

கண்ணீராலும்......

நிரப்பப்பட்ட நான்

ஒரு சராசரி மனிதனே...

எனக்காக அழ

எனக்காக சிரிக்க

நீ வேண்டும்.

உணர்வுகள் உன்னதமானது

உணர்ந்தால்மட்டுமே

அதன் உன்னதம் புரியம்

உணர்ந்தால் சொல்....

உயிராய்.....

உறவாய்....

என்றென்றும்...

உனக்காக நான்.......