Friday, 29 January 2010

என் இரண்டாம் தாயே....

சகியே...
மணநாளில்
பெற்றவர்கள் தான் பெற்ற பிள்ளை செல்வத்தை
கன்னிகாதானம் செய்வார்கள்

ஆனால் இங்கோ
நீ பெற்ற என் காதல் செல்வத்தை
என்னை பெற்றவர்களுக்காக தாரைவார்க்க இசைந்தாயே...
என் இரண்டாம் தாயே....

உனக்காக என் காகிதங்கள் கவிதைகள் படித்ததில்லைதான்..
ஆனால் என் கருவிழிகள் அது கண்ணீர் வடிக்கிறதே...
சாதி என்ற சமூக சுட்சமத்தின் சதியை எண்ணி

கடவுள் என்பவன் கல்லில் இல்லை
என்பதைக்கூட பகுத்தறிந்தேன்

ஆனால், காதல் என்னும் விடுகதைக்கு
விடை தேட முற்பட்டும் முடியவில்லை
விதி என்று விட்டுபோகவும் மணமில்லை

தொடர்ந்து பயணிக்குறேன்...
காலத்தின் போக்கில்...

என் கனவுகள் நிஜமாகுமா..?
என் கவிதைகள் உனை சேருமா..?

உன் நினைவுகளுடனான எனது பயணம்.........

என் சரிரத்தில் உதிரமாய் என்னில் பயணிப்பவளே...

உன் நினைவுகளுடனான எனது பயணம்

என் ஆயுள் உள்ள வரை என்றாலும்...

உன்னோடு நான் கொண்ட உரையாடல் பயணம்

அது சிலகாலம் மட்டுமே...

ஆதலே...

உன்னோடு நான் பயணிக்கும்

ஒவ்வொரு நொடிகளையும்

ஆத்மார்த்தமாய் வாழ்கிறேன்....

வழித்துணையாய் நீ இருந்தால்.......

துயரங்கள் என்னை தொடும்போதெல்லாம்

தூயவளே உன் துணை தேடி வருகிறேன்

வழித்துணையாய் நீ இருந்தால்

வாழ்வின் எத்தகைய துயரங்களையும் கடந்திடுவேன்

ஆனால்....

உன் பிரிவென்ற மீளா துயரத்தில்

என்னை வீழ்த்திடாதே.....

தொலையாத நினைவுகளின் தேடல்.......

நேசித்து பார் கவிதை வரும்

பிரிந்து பார் சோகம் வரும்

நினைத்து பார் அழுகை வருமுன்னு சொன்னாங்க...


ஆம்

என் மழலை மொழியே....

உன்னை நேசித்தேன்

உனக்காய் சில கவிதைகளை கருத்தரித்தேன்...

துணையாய் நேசித்த நீ என்னை பிரிந்தபோதே

உன்னோடு நான் கொண்ட நேசத்தை உணர்ந்தேன்

நீ இல்லாத நிமிடங்களை கண்ணீரில் கரைத்தேன்

தொலையாத உன் நினைவுகள்

உன்னிடம் தொலைந்த என்னை தேடுதே....

என் மழலை கவிதையே.........

என் மழலை கவிதையே

என்னை கொண்டவளும் நீதான்

என்னை கொன்றவலும் நீதான்

என் வாழ்க்கை பயணத்தை

உன்னோடு பயணிக்கவே விரும்பினேன்,

ஆனால் நீயோ...

உன் நினைவுகளோடு பயணிக்க என்னை பனித்துவிட்டது ஏனோ.... ?

நேசத்தின் வண்ணங்கள்....

என்னை வசிகரித்த மழலை கவிதையே...

என் தோட்டத்திற்கு வந்து பார்

உனக்கான என் நேசத்தின் வண்ணங்கள் அங்கே மலர்களாய்...

என்னவளே...

அவை காகித பூக்கள் அல்ல

அவற்றுக்கு என் மனம் சொல்லும் மணம் உண்டு

ஆம் அன்பே...

என் சுவாசத்தில் கலந்திட்ட உன்னோடு

என் உயிர் கொண்ட நேசத்தை சொல்லும்...

கடந்து போன தென்றல் அது கடைசியாய் விட்டுபோன தடையம்...

கண்ணம்மா... கண்ணம்மா....

பதில் சொல்லம்மா.. பதில் சொல்லம்மா...

என்னம்மா... என்னம்மா...

பாசம் வச்சதே ஒரு குத்தமா..?



உன்னை எண்ணி பாக்காமலே விட்டுதந்தேனே

என் காதலைத்தான் இப்ப நான் தத்து தந்தேனே

உன் கூரையிலே நானும் வாழ ஆசைபட்டேனே

ஒரு பாசத்துக்கு நானும் வாழ ஆசைபட்டேனே

என் காதல் ஒரு காத்தாடியாய் துள்ளி வந்ததே

அது பாசம் எனும் கம்பத்திலே மாட்டிகிட்டாதே

நான் பட்ட கடன் தீர்க்க இப்போ நேரம் வந்தததே

அந்த நேரத்தில நம்ம காதல் ஓரம் போனதே

யாரோட சாபம் வாளாய் மாறி நம்ம

ரெண்டுபேரு நெஞ்ச குத்திக் கொல்லுதே



குத்தமா..? குத்தமா..?

ஆசை வைச்சதே ஒரு குத்தமா..?

ஒத்த வார்த்தை கேக்கும்போதே செத்துபோனேனே

நான் ஓடி வந்து நிக்கும் போதே சாம்பல் ஆனேன

உன்னை பார்த்து என்னன்னெமோ கேக்க வந்தேனே

என் வார்த்தை எல்லாம் தொலைஞ்சு இப்ப ஊமை ஆனேன

என் காதல் தேறும் தேரடியை சேரவில்லையே

உன் காலடியில் நொறுங்கிபோச்சு தேறவில்லையே

என் தூக்கத்துக்கு மருந்து எங்கு இருக்கு

அடி திக்கி திக்கி பேசும் உன் கண்ணில் இருக்கு

யார் செஞ்ச பாவமோ பாம்பாக மாறித்தான்

நம்ம ரெண்டுபேரு காலைசுத்தி கிடக்கு

கண்ணம்மா... கண்ணம்மா....

பதில் சொல்லம்மா.. பதில் சொல்லம்மா...

என்னம்மா... என்னம்மா...

பாசம் வச்சதே ஒரு குத்தமா..?