Wednesday, 5 October 2011

உயிராக உனையே நான் கொண்டதாலே.....

காதல் என் வாழ்வில் கானல் நீரானால்
கரை சேர்வதெங்கே கரை  சென்ற மானே
கனிவான வாழ்வே கனவான பின்னே
தனியாக உலகில் தவிக்கின்றேன்  நானே
அரும்பாக இளமை அடிவைத்தபோதே 
குறும்பாக என்னில் குடிவந்த  பெண்ணே
மலராக என் வாழ்வில் மனம் வீசி வந்தாய்
மதுவாக மாறி எனை வீழ்த்தி சென்றாய்
உயிராக உனையே  நான் கொண்டதாலே
பிரிவான பின்னே நான் என்னில் இல்லை

http://www.youtube.com/watch?v=a5KC0EeWluU