Saturday, 8 May 2010

நாள்தோறும் ரசிகன்.....

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே


என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்


சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே


வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே..



கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்....

உனை தேடிய பயணத்தில்....



உனை தேடிய பயணத்தில்



உயிர் வலித்த நொடிகள் ஏராளம்

 
உறக்கம் தொலைத்த இரவுகள் ஏராளம்

அத்தனையும் எண்ணில் அடங்காது

ஆயினும்,

அரிதாய் சில உன்னத நொடிகள்

உயிர்  கொண்ட நேசத்திற்கு

உறமிட்ட நொடிகள்.

உன் கரம் பற்றி

இல்லறம் கண்டு

நல்லறம் பயிலவே யாசிக்கிறேன்

உனை விடுத்து என் உயிர் அது

என்னில் அடங்காது

என் உயிரே....

உலகை பிரிவேன்...

ஆயினும்,

உனை பிரியேன்...