Monday, 29 July 2013

மாமன் தொட்ட பூந்தேரே....




சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
தென்னங்கிற்றில் ராகம் தேடும் தெம்மாங்க
கதை பேசும் கண்ணோடு
கலங்காதே பெண் மானே
துணை நானே பொன் மானே

காக்கை சிறகிலே தீண்டி கதைகள் நூறு கூறவா
பாசம் வைத்த பால் நிலாவை கையில் நானும் ஏந்தவா
மாமன் தொட்ட பூந்தேரே
மனதில் நீயும் ஏங்காதே

ஏக்கத்தோடு நீ போனால் ஏழை நெஞ்சு தாங்காதே
நீயும் வாழத்தானே..... நானும் வாழ்கிறேனே.....
வீசும் தென்றலே.... பேசு தென்றலே....

வாழை நாரிலே தாலி போட்ட காலம் வேறம்மா
சாமி சாட்சியாக நானும் தந்த வாக்கு மாறுமா
நாணத்தோடு பூச்சூடி நாளும் எந்தன் பேர் பாடி
ஆடி பாடும் காத்தடி மறந்ததென்ன ஆத்தாடி
தேடி தேடித்தானே.... நானும் வாழ்கிறேனே....
வீசும் தென்றலே.... பேசு தென்றலே...

Sunday, 7 July 2013

நீ பிரிந்து போனதும் பொய்தான்...

 
 
 
 
 
 
நீ பிரிந்து போனதும் பொய்தான்...

என்னை மறந்து போனதும் பொய்தான்...

இதை யாரிடம் நான் கூறுவேன்


நீ என்னை சேர்ந்திட வருவாய்...

நான் சுமக்கும் காதலை பெறுவாய்...

என நம்பிதான் நான் வாழ்கிறேன்.....


ஓடி மறைவது எதற்கு

என் உயிரில் உறைந்தது எதற்கு

மண்ணில் பிறந்தது எதற்கு

நீ என்னில் கலக்கணும் அதற்கு

யாசகம் கேட்க்கிறேன்

காதல் நீ கொடு...

இல்லையேல் என்னை நீயே கொன்றிடு....


மண் மேலே காதல் கொண்டால் பெரும் குற்றமா..?

காதல்தான் இல்லை என்றால் பூமி சுற்றுமா..?


நீ மட்டும் தனியே சென்றால் சுயம்தானடி

நான் மட்டும் வாழ்ந்திட இங்கே பயம்தானடி


துடிக்காமல் வாழும் இதயம்

நான் உணர்கிறேன்...

மௌனமே பாசையாய் மாறிபோனது

வேதனை தலைக்குமேல் மீறி போனது


Sunday, 7 October 2012

விவசாயி.....







விவசாயி
நவீன தேசமே....
 
இந்த தேசத்தின் பெரும்பான்மையானவர்கள் நாங்கள்
இன்று சிறுபான்மையாகிப்போகலாம் 
 
தேசம்,இனம், மொழி, மதங்களை கடந்து
எங்களை ஒருங்கிணைத்த நதிகள்
இன்று எங்களை பிரித்தாளும் காரணிகளாகிப்போகலாம்
 
கழனிகள் செழித்த தேசம் 
இன்று கணினி தேசமாகிப்போகலாம்
 
அன்னமிட்ட காணியெல்லாம் 
இன்று அந்நிய செலவாணி ஈட்டும் காலணிகளாகிப்போகலாம்
 
உலக பொருளாதாரம் எங்களை பற்றி 
விவாதித்தபோதிலும் 
 உங்கள் ஊடகங்கள் எங்கள் வாழ்வியல் 
போராட்டங்களை காட்சிபடுத்தியபோதிலும்
நீங்கள் எங்களை கடந்து போகலாம் 
 
நிச்சயம் ஒரு நாள் உங்கள் இரைப்பை
எங்களை உங்களுக்கு நினைவூட்டும்     
 
தாழ்ந்தாலும் எரிவோம்
எரிதழலாய்....
வீழ்ந்தாலும் வாழ்வோம் 
விதையாய் 
ஏனெனில் ...
விதைத்து பழகியவர்கள் நாங்கள்.

Saturday, 14 July 2012

பூக்களின் வாழ்வாதாரம் ....?









பூச்சூட மறுத்துவிட்டாள் புதுமைப்பெண்
பூக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை 
இழந்து தவிக்கின்றன..... 

Wednesday, 5 October 2011

உயிராக உனையே நான் கொண்டதாலே.....

காதல் என் வாழ்வில் கானல் நீரானால்
கரை சேர்வதெங்கே கரை  சென்ற மானே
கனிவான வாழ்வே கனவான பின்னே
தனியாக உலகில் தவிக்கின்றேன்  நானே
அரும்பாக இளமை அடிவைத்தபோதே 
குறும்பாக என்னில் குடிவந்த  பெண்ணே
மலராக என் வாழ்வில் மனம் வீசி வந்தாய்
மதுவாக மாறி எனை வீழ்த்தி சென்றாய்
உயிராக உனையே  நான் கொண்டதாலே
பிரிவான பின்னே நான் என்னில் இல்லை

http://www.youtube.com/watch?v=a5KC0EeWluU

Thursday, 26 May 2011

காலம் வரட்டும் உன் மடி சேர ....



நேசத்திற்கு உரியவளே....

என் செந்நீரில் கலந்திட்டேன் உன்னை

கண்ணீரில் கரைப்பது  சாத்தியமில்லை


காலம் வரட்டும் உன் மடி சேர

இல்லையேல்...

காளன் வரட்டும்