உனை தேடிய பயணத்தில்
உயிர் வலித்த நொடிகள் ஏராளம்
உறக்கம் தொலைத்த இரவுகள் ஏராளம்
அத்தனையும் எண்ணில் அடங்காது
ஆயினும்,
அரிதாய் சில உன்னத நொடிகள்
உயிர் கொண்ட நேசத்திற்கு
உறமிட்ட நொடிகள்.
உன் கரம் பற்றி
இல்லறம் கண்டு
நல்லறம் பயிலவே யாசிக்கிறேன்
உனை விடுத்து என் உயிர் அது
என்னில் அடங்காது
என் உயிரே....
உலகை பிரிவேன்...
ஆயினும்,
உனை பிரியேன்...

No comments:
Post a Comment