சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
தென்னங்கிற்றில் ராகம் தேடும் தெம்மாங்க
கதை பேசும் கண்ணோடு
கலங்காதே பெண் மானே
துணை நானே பொன் மானே
காக்கை சிறகிலே தீண்டி கதைகள் நூறு கூறவா
பாசம் வைத்த பால் நிலாவை கையில் நானும் ஏந்தவா
மாமன் தொட்ட பூந்தேரே
மனதில் நீயும் ஏங்காதே
ஏக்கத்தோடு நீ போனால் ஏழை நெஞ்சு தாங்காதே
நீயும் வாழத்தானே..... நானும் வாழ்கிறேனே.....
வீசும் தென்றலே.... பேசு தென்றலே....
வாழை நாரிலே தாலி போட்ட காலம் வேறம்மா
சாமி சாட்சியாக நானும் தந்த வாக்கு மாறுமா
நாணத்தோடு பூச்சூடி நாளும் எந்தன் பேர் பாடி
ஆடி பாடும் காத்தடி மறந்ததென்ன ஆத்தாடி
தேடி தேடித்தானே.... நானும் வாழ்கிறேனே....
வீசும் தென்றலே.... பேசு தென்றலே...
No comments:
Post a Comment