கண்ணம்மா... கண்ணம்மா....
பதில் சொல்லம்மா.. பதில் சொல்லம்மா...
என்னம்மா... என்னம்மா...
பாசம் வச்சதே ஒரு குத்தமா..?
உன்னை எண்ணி பாக்காமலே விட்டுதந்தேனே
என் காதலைத்தான் இப்ப நான் தத்து தந்தேனே
உன் கூரையிலே நானும் வாழ ஆசைபட்டேனே
ஒரு பாசத்துக்கு நானும் வாழ ஆசைபட்டேனே
என் காதல் ஒரு காத்தாடியாய் துள்ளி வந்ததே
அது பாசம் எனும் கம்பத்திலே மாட்டிகிட்டாதே
நான் பட்ட கடன் தீர்க்க இப்போ நேரம் வந்தததே
அந்த நேரத்தில நம்ம காதல் ஓரம் போனதே
யாரோட சாபம் வாளாய் மாறி நம்ம
ரெண்டுபேரு நெஞ்ச குத்திக் கொல்லுதே
குத்தமா..? குத்தமா..?
ஆசை வைச்சதே ஒரு குத்தமா..?
ஒத்த வார்த்தை கேக்கும்போதே செத்துபோனேனே
நான் ஓடி வந்து நிக்கும் போதே சாம்பல் ஆனேன
உன்னை பார்த்து என்னன்னெமோ கேக்க வந்தேனே
என் வார்த்தை எல்லாம் தொலைஞ்சு இப்ப ஊமை ஆனேன
என் காதல் தேறும் தேரடியை சேரவில்லையே
உன் காலடியில் நொறுங்கிபோச்சு தேறவில்லையே
என் தூக்கத்துக்கு மருந்து எங்கு இருக்கு
அடி திக்கி திக்கி பேசும் உன் கண்ணில் இருக்கு
யார் செஞ்ச பாவமோ பாம்பாக மாறித்தான்
நம்ம ரெண்டுபேரு காலைசுத்தி கிடக்கு
கண்ணம்மா... கண்ணம்மா....
பதில் சொல்லம்மா.. பதில் சொல்லம்மா...
என்னம்மா... என்னம்மா...
பாசம் வச்சதே ஒரு குத்தமா..?
No comments:
Post a Comment