நேசித்து பார் கவிதை வரும்
பிரிந்து பார் சோகம் வரும்
நினைத்து பார் அழுகை வருமுன்னு சொன்னாங்க...
ஆம்
என் மழலை மொழியே....
உன்னை நேசித்தேன்
உனக்காய் சில கவிதைகளை கருத்தரித்தேன்...
துணையாய் நேசித்த நீ என்னை பிரிந்தபோதே
உன்னோடு நான் கொண்ட நேசத்தை உணர்ந்தேன்
நீ இல்லாத நிமிடங்களை கண்ணீரில் கரைத்தேன்
தொலையாத உன் நினைவுகள்
உன்னிடம் தொலைந்த என்னை தேடுதே....
No comments:
Post a Comment